Pages

21 Sept 2016

அப்துர் ரஹ்மான் காரி (ரலி) என்ற சஹாபியை காபிர் என்று சொல்லும் அஹமது ரிழா கான் பரேல்வி.



வழிகேடான கொள்கையை கொண்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் பீஜே அவர்கள்
ஜகாத் விஷயத்தில் ஒட்டுமொத்த உம்மத்திற்கும் முரண்பாடான நிலைப்பாட்டை
எடுத்தார்.ஜகாத் விஷயத்தில் ஒரு நபித்தோழரை அவர்  நபித்தோழர் அல்ல என்பதாக
கூறினார்.

இதனை விட ஒருபடி மேலாக அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் போர்வையில்
ஒளிந்து கொண்டிருக்கும் ஆங்கிலேயே அடிவருடிகளான பரலேவிகளின் தலைவர் "ரிளாகான்
பரலேவி" அவர்கள் ஒரு நபித்தோழரை காபிர் என்பதாக விமர்சித்துள்ளார். ஆனால்
வழக்கம் போல் பரலேவிய ஆதரவாளர்கள் வாய்மூடி மெளனியாக உள்ளனர். ஏனெனில்
இஸ்லாத்தின் மீது இருக்கும் பிரியத்தை விட அவர்களுக்கு  ரிளாகானின்
பிரியம்தான் பெரியது. ஒரு போதும் இந்த விமர்சனத்திற்கு  எதிராக பரலேவிகள் கொதித்தெழ போவதில்லை.

இனி
ரிளாகான் பரலேவி "மல்பூஜாத்" எனும் அவரது நூலில் எழுதியிருப்பதைப் பார்ப்போம்!

  ஒரு தடவை அப்துர் ரஹ்மான் அப்துல் காரி என்கிற இறைநிராகரிப்பாளன்
இருந்தான்.தனது தோழர்களுடன் அண்ணல் நபி ஸல் அவர்களின் ஒட்டகங்களை தாக்கியதுடன்
மேய்ப்பாளரையும் கொலை செய்தான்.
(மல்பூஜாத் இரண்டாம் பாகம் சுருக்கம்)

ரிளாகான் பரலேவி அவரது மல்பூஜாதில் நபித்தோழரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

காபிர்,பன்றி,
ஷைத்தான்,திருடன் என சகட்டுமேனிக்கு விமர்சித்துள்ளார்.
கடும் விமர்சனமும்,அவதூறும் நிரம்பிய நூலை பரலேவிகள் மகிழ்ச்சியுடன்
வெளியிட்டுள்ளனர்.
பல பதிப்புகள் வெளியிடப்பட்டது.
பல வருடங்களாக அவதூறு நிரம்பிய வாசகங்களை எந்த ஒரு பரலேவியும் நீக்கவில்லை.

அது மட்டுமின்றி அஃலா ஹள்ரத் ரிளாகான் அவர்களின் மல்பூஜாத்தை படித்து ஈமானை
புதுப்பித்துக்கொள்ளுங்கள்!
என முஸ்லிம்களிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டது.

நடுநிலையோடு சிந்தித்துப்
பாருங்கள்!

அண்ணலாரின் தோழரின் மீது அவதூறை அள்ள வீசியுள்ள மல்பூஜாத்தை படிப்பதால்
ஈமானில் புத்துணர்ச்சி உண்டாகுமா? அல்லது ஈமான் அறவே இல்லாமல் போகுமா?

முழு உலகமும் எடுத்து செயல்படுத்த வேண்டிய உயர்ந்த நூல் மல்பூஜாத் என்பதாக
அதனின் முன்னுரையில் எழுதப்பட்டுள்ளது. அண்ணலாரின் ஆருயிர் தோழரை பகிரங்கமாக
பன்றி,ஷைத்தான் என்பதாக விமர்சித்துள்ளார்.எனினும் பரலேவிகளில் எவருக்கும்
ஈமானிய ரோஷமும், இறைஉணர்வும் இல்லாமல் போனதால் மெளனம்
காக்கின்றனர்.பரலேவிகளுக்கு ஈமானிய ரோஷம்,இறைஉணர்வு தேவ்பந்த் பெரியோர்களுக்கு
எதிராக மட்டும்தான்.

ஆனால் உண்மையில் அது ஈமானிய ரோஷமல்ல மாறாக சத்திய
உலமாக்களான தேவ்பந்த் பெரியோர்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியும்,குரோதமும்
அன்றி வேறில்லை.

அஃலா ஹள்ரத் ரிளாகான் கூறுகிறார்:

 எனது மார்க்கம்,பாதையில் செல்லுங்கள் எனது
மார்க்கமானது எனது நூல்கள் தான் இதன் பேரில் அமல் செய்வது அனைத்து பர்ளுகளை
விட மேலான பர்ளாகும்.
[حیات اعلی حضرت  ]



ஆக நாயகத்தின் தோழரை ஷைத்தான்,பன்றி, திருடன் என்று சொல்வதானது அனைத்து
பர்ளுகளை விட உயர்ந்தது
அஃலா ஹள்ரத் சொல்லின் மூலம் புரியமுடிகிறது. (அல்லாஹ் பாதுகாப்பானாக)

நாயகத்தின் தோழரை கீழ்த்திரமாக விமர்சித்த ரிளாகான் பரலேவியை
பரலேவிகள், இமாம்,முன்னோடி,தீனை உயிர்ப்பித்தவர்,சுன்னத் வல் ஜமாஅத்தை
சேர்ந்தவர்,ஹனபி,முஃப்தி,பெரும் மார்க்க மேதை,மெளலானா,சுன்னாவை
உயிர்பிப்பவர்,நாயகத்தின் நேசர்,ஹதீஸ் கலை வல்லுனர்,திருக்குர்ஆன்
விரிவுரையாளர் என்பதாக கொண்டாடுகின்றனர்.இதற்கு நேர் எதிராக ரிளாகான் பரலேவி
அபூஜஹ்லை விட கேடு கெட்டவராகதான் இருக்கமுடியும்.

பதாவா ரஷீதிய்யாவில்
நபித்தோழர்களை விமர்சிப்பவர் அஹ்லுஸ்ஸுன்னாவை விட்டு வெளியேறியவர் என்பதில்
எழுத்தாளரின் தவறுதலின் காரணமாக خارج  ہوگا (வெளியேறிவிடுவார்) என்பதானது خارج
نہ ہوگا வெளியேற மாட்டார்  என மாறிவிட்டது.இதற்கு எதிராக பரலேவிகள்
வானத்திற்கும் பூமிக்கும் குதித்தனர்.

அஹ்மத் ரிளாகான் விஷயத்தில் மட்டும்
பரலேவிகள் சத்தியத்தை மூடிமறைக்கின்றனர். இனி அப்துர் ரஹ்மான் காரி என்பவர்
யார் என்பதை ஆராய்வோம்!

قال ابن معين هو ثقة و قيل له صحبة

(1)இப்னு மயீன் கூறுகிறார்: அவர் பலமானவர்.மேலும் நபித்தோழர் என்பதாகவும்
கூறப்படுகிறது.

(2)ஸஹீஹுல் புகாரியில் இவரின் ஒரு ரிவாயத் இடம் பெற்றுள்ளது

(3) இவ்வாறே அப்துர் ரஹ்மான் காரி ரளி அவர்கள் மூத்த நபித்தோழர்களிடமிருந்து
அறிவித்த ஹதீஸ்கள் நூல்களில் இடம்பெற்றுள்ளன.

(3)عن عروة بن زبير عن عبد الرحمان بن عبد القاري انه قال خرجت مع عمر بن
الخطاب ليلة فى رمضان الى المسجد

உர்வா இப்னு ஜுபைர் அவர்கள் அப்துர் ரஹ்மான் அப்துல் காரி அவர்களிடமிருந்து
அறிவிக்கிறார்கள் நான் ரமளானில் ஒரு இரவில் உமர் ரளி அவர்களுடன் பள்ளிக்கு
சென்றேன்.

(4)இது மட்டுமின்றி அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ் அவர்களும் அப்துர்
ரஹ்மான் அப்துல் காரி ரளி அவர்களை ஸஹாபி என்பதாக கூறியுள்ளார்கள் .

عبد الرحمان
بن عبد بغير اضافة القارى بتشديد الياء يقال له رؤية

 (تقريب التهذيب)

இப்னு ஹஜர் ரஹ் அவர்களின் ஆய்வின் படி அப்துர் ரஹ்மான் அப்துல் காரி ஸஹாபி
என்பது நிரூபணமாகிறது.

எனினும் அப்துர் ரஹ்மான் அப்துல் காரி ஸஹாபி என்பதில் கருத்து வேறுபாடுகள்
உள்ளது.சிலர் ஸஹாபி என்கின்றனர்.சிலர் தாபியி என்கின்றனர்.எனினும் இரு
சாராரும் சுவனவாசிகள் என்பதில் சந்தேகமில்லை. அப்துர் ரஹ்மான் அப்துல் காரி
அவர்கள்,நபி ஸல் அவர்களின் காலத்தில் பிறந்தவர் எனினும் நபி ஸல் அவர்களை
சந்திக்கவில்லை.இமாம் வாகிதி ரஹ் அவர்கள்,அவரை ஸஹாபி என்கின்றார்.ஆனால் சரியான
கருத்து அவர் தாபியி மேலும் அவர் உமர் ரளி அவர்களை சந்தித்தது
நிரூபணமாகியுள்ளது.
اكمال فى اسماء) 
الرجال لصاحب
لمشكاة)

முக்கிய குறிப்பு: 

இமாம் வாகிதி ரஹ் அவர்களின் ஆய்வு கண்ணோட்டத்தின்படி
அப்துர் ரஹ்மான் அப்துல் காரி உறுதியாக ஸஹாபி என்பதாக
நிரூபணமாகியுள்ளது.பரலேவிய அறிஞர் மெஹர் அலி அவர்கள் வாகிதி (ரஹ்) அவர்களை
ஹாபிளுல் ஹதீஸ்,பலமானவர்,ஹதீஸ் கலை அறிஞர்,ஹதீஸில் அமீருல் முஃமினீன் என
புகழ்ந்துள்ளார்.(ديوبندى مذهب)

வாகிதி ரஹ் அவர்களின் விஷயத்திலே பத்ஹுல் கதீர்,ஷர்ஹு ஹிதாயா,உயூனுல் அஸர்
லிப்னி ஸய்யிதின்னாஸ் என்ற நூலின் ஆதாரத்துடன் "அமீருல் முஃமினீன்" என்ற
பட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார்.(ديوبندى مذهب )

     அப்துர் ரஹ்மான் அப்துல் காரி அவர்கள் தாபியாகவே இருக்கட்டும் தாபியை
காபிர் என்பதாக கூறுவது முறையா? நபி (ஸல்) அவர்களின் ஒட்டகங்களை தாக்கி
மேய்ப்பாளரை கொன்றவன் உண்மையில் அப்துர் ரஹ்மான் ஃபுஜாரி இவன்தான் காஃபிர்
அறியாமையின் காரணமாக அப்துர் ரஹ்மான் அப்துல் காரியை காபிர் என்பதாக பெரும்
அபாண்டத்தையும்,பழியையும் சுமத்தியுள்ளார்.இதனைப் பற்றிய முழுமையான சம்பவத்தை
பின்வரும் லிங்கில்
பார்வையிடவும்.

library.islamweb.net/newlibrary/display_book.php?bk_no=1&ID=853&idfrom=3443&idto=3444&bookid=1&startno=1


http://xn--mlcvnce4ac1emw6ewci.library.islamweb.net/newlibrary/display_book.php?bk_no=1&ID=853&idfrom=3443&idto=3444&bookid=1&startno=1>
(அரபி லிங்க்)

www.tamililquran.com/muslimdisp.php?start=3684 
(தமிழ் லிங்க்)

  நபித்தோழர்கள்,தாபியீன்கள்,தபாஅத்தாபியீன்களின் அந்தஸ்து:

   கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களை திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தை
(இறைவழியில்) செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த ஒரு கைக்குவியல் அல்லது
அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தருமம் எட்ட முடியாது.

ஹழ்ரத் அபூசையீத் அல்குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)
ஸஹிஹுல் புகாரி - 3673,  ஸஹிஹுல் முஸ்லிம் -2541,  மிஷ்காத் - 6007

   கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர் (ஸஹாபாக்கள்) அவர்களுக்குப் பிறகு
(சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தாபிஈன்கள்) அவர்களுக்கும் பிறகு
(சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். (தப அத்தாபிஈன்கள்) பின்னர் ஒரு
சமுதாயத்தார் வருவார்கள். அவர்களுடைய சாட்சியம் அவர்களுடைய சத்தியத்தை
முந்திக் கொள்ளும். அவர்களுடைய சத்தியம் அவர்களுடைய சாட்சியத்தை முந்திக்
கொள்ளும்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் பின மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு)
​ஸஹிஹுல் புகாரி - 3651

      கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் புனிதப்
போருக்குச் செல்வார்கள். அப்போது (அவர்கள் யார் மீது படையெடுத்துச்
செல்கிறாரோ) அவர்கள் உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றனரா என்று கேட்பார்கள். ஆம்
இருக்கிறார்கள் என்று (போர் செய்யச் சென்ற) அவர்கள் பதில் சொல்வார்கள். உடனே
போருக்குச் சென்ற அவர்களுக்கு வெற்றி அளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு
காலம் வரும். மக்களில் ஒரு குழுவினர் புனிதப் போர் புரியச் செல்வார்கள்.
(அவர்களிடம்) உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
அவர்களின் தோழர்களுடன் தோழமை கொண்டவர்கள் இருக்கின்றார்களா என்று
கேட்கப்படும். போருக்குச் சென்றவர்கள் ஆம் இருக்கிறார்கள் என்று சொல்வார்கள்.
உடனே அவர்களுக்கு வெற்றியளிக்கப்படும். பிறகு மக்களிடையே ஒரு காலம் வரும்.
மக்களில் ஒரு குழுவினர் போருக்குச் செல்வார்கள். அப்போது அவர்களிடம்
அல்லாஹ்வின் தூதருடைய தோழர்களிடம் தோழமை கொண்டிருந்தவர்களுடன் தோழமை
கொண்டவர்கள் (தாபியீன்கள்) உங்களிடையே இருக்கின்றனரா என்று கேட்கப்படும்.
அதற்கு அவர்கள் ஆம் இருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள். உடனே அவர்களுக்கு
வெற்றியளிக்கப்படும்.

ஹழ்ரத் அபூசயீத் அல் குத்ரீ (ரலியல்லாஹு அன்ஹு)
​​ஸஹிஹுல் புகாரி - 3649

     கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
எனது தோழர்களை விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனது தோழர்கள் விடயத்தில்
அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனக்குப்பின் அவர்களை உங்களது பேச்சுக்கு
ஆளாக்கிக்கொள்ளாதீர்கள். எவர் அவர்களை நேசிக்கின்றனரோ அவர் என்னை
விரும்புவதாலேயே அவர்களை நேசம் கொண்டார். இன்னும் அவர்களை கோபிப்பவர்கள்
என்னைக் கோபிப்பதாலேயே அவர்களைக் கோபித்தனர். அவர்களுக்கு நோவினை செய்வோர்
என்னையே நோவினை செய்கின்றனர். எவன் என்னை நோவினை செய்வானோ, அவன் அல்லாஹ்வை
நோவினை செய்தவனாகும். அல்லாஹ்வை நோவினை செய்பவன் சமீபத்தில் வேதனை
அளிக்கப்படுவான்.

ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலியல்லாஹு அன்ஹு)
திர்மிதி 3797, மிஷ்காத்

      கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
எனது தோழர்களை எவரேனும் ஏசப்பேசக் கண்டால் (அல்லது கேட்டால்) இந்த கெடுதிக்காக
அல்லாஹ்வின் சாபம் அவர்கள் மீது உண்டாகட்டும் எனச் சொல்லுங்கள்.

ஹழ்ரத் இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
திர்மிதி, மிஷ்காத்

  கண்மணி நபி ஸல் அவர்கள் கூறினார்கள்:
எனது தோழர்களை கண்ணியப்படுத்துங்கள்! அவர்கள் உங்களை விட சிறந்தவர்களாக
திகழ்கிறார்கள்.பிறகு அவர்களை அடுத்து வருபவர்களை (தாபியீன்கள்)
கண்ணியப்படுத்துங்கள்!பிறகு அடுத்து வருபவர்களை (தப்அத்தாபியீன்கள்)
கண்ணியப்படுத்துங்கள்!

ஹள்ரத் உமர் ரளி அன்ஹு அவர்கள் மிஷ்காத்

   அஹ்மத் ரிளாகான் பரலேவி ஆய்வின்றி எதார்த்தமாக  எழுதவில்லை திட்டமிட்டுதான்
நபித்தோழரை அல்லது தாபியை காபிர்,ஷைத்தான்,திருடன் என விமர்சித்துள்ளார்
என்பதற்கு பின்வரும் அவரின் வாசகமே சான்றாக அமைந்துள்ளது.

ایک بار عبد الرحمان قاری کہ کافر تھا اپنے ہمراہئوں کے ساتھ حضور اقدس صلی
اللہ علیہ و سلم کے اونٹوں پر آپڑا چرانے والے کو قتل کیا اور اونٹ لے گیا اسے
قرات سے قاری نہسمچھیں بلکہ قبیلہ بنی قارہ سے

அப்துர் ரஹ்மான் காரி என்ற
காபிர் இருந்தான்.தனது தோழர்களுடன் நபி ஸல் அவர்களின் ஒட்டகத்தை தாக்கியதுடன்
மேய்ப்பாளரை கொலை செய்தான்.
ஒட்டகத்தையும் ஓட்டி சென்று விட்டான்.கிராஅத் என்பதன் காரணமாக அவனை காரி எண்ணி
விடாதீர்கள்.மாறாக அவன் பனூ காரா என்ற கபீலாவை சேர்ந்தவன்.

பிறகு பல ஆண்டுகள் கழித்து  பரலேவிகள், அஹ்மத் ரிளாகான் நபித்தோழர் அல்லது
தாபியின் மீது அள்ளி வீசிய அபாண்டத்தை,அவதூறை, அருவருக்கத்தக்க விமர்சனத்தை
சத்தமின்றி அப்துர் ரஹ்மான் காரி என்பதை அப்துர் ரஹ்மான் ஃபுஜாரி என மாற்றி
சில வாசகத்தை எடுத்து விட்டனர்.அஹ்மத் ரிளாகானின் மானம் காத்தனர்.

ஆதாரம் :













18 Sept 2016

தப்லீக் தாஃலீம் - மௌலான ஜகரிய்யா (ரஹ்).

தப்லீக் தஃலீமில் உள்ளது எதுவும் ஜகரிய்யா மௌலானா (ரஹ்) வுடைய சொந்த சரக்கல்ல. மாறாக குர்ஆன் ,ஹதீஸ். இதற்கு முன்னால் வாழ்ந்த மிகப்பெரும் இமாம்களான ஹதீஸ்களை மேதைகளான இமாம் தஹபி (ரஹ்), அபு நுஜம் (ரஹ்), இப்னு அஸாகிர் (ரஹ்), இமாம் கஜ்ஜாலி (ரஹ், நவவி (ரஹ்) யபியீ (ரஹ்) , இமாம் சுயூதி (ரஹ்) என்ற பெரும் மேதைகளால் தங்களுடைய கிதாபுகளில் எழுதிவைக்கப்பட்டவையே இமாம் ஜகரிய்யா (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள்.

இமாம்களின் கிதாபும் ,அதன் பக்க எண்களும் கீழே photo copy ல் தரப்பட்டுள்ளது.

இதன் உண்மை என்னவெனில் மேற் சொன்ன இமாம்கள் அணைவரும் நம்பகமாணவர்கள் ,உண்மையானவர் என்பதை எல்லோரும் ஏற்றுள்ளார்கள்!!!

தப்லீகை எதிற்ப்பவர்கள்
பரிசுத்த குர்ஆனை கேலி செய்த இடங்கள்:


கண்ணியமாண ஹதீஸை கேலி செய்யும் இடங்கள் :


ஆன்மீக காலத்து உண்மைகளை அவமதித்து கேலி செய்த இடங்கள் :


விளங்குவதற்க்கு அல்லாஹ் தௌபீஃ செய்தருள்வானாக . آمين

பரேலவி முப்தி தேவ்பந்த் உலமாகளை பற்றி கொடுத்த பத்வா.

   
பரேலவி முப்தி தேவ்பந்த் உலமாகளை பற்றி கொடுத்த பத்வா.




                                                       بسم الله الرحمن الرحيم.


ஹஜ்ரத் அக்குதஸ் சேக் முப்தி அஹ்லம் பாகிஸ்தான்.மௌலானா மன்ஸுர் அஹமது சாஹிப் பைஜீ முஹ்தமின் முப்தி ஜாமியா பைஜியா ரிஜ்வியா.

கச்பரி ரோடு.
அஹமது பூர் சர்கியா.
வஹாலவல்பூர் (மாவட்டம்).


பத்வா கேட்டவர் :

அப்துல் கனி ரிஜவி பைஜீ மதீனா முனவ்வரா.
போன் : 234353

கேள்வி :

தேவ்பந்த் உலமாகளை அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாத் என்று கூறுவது சரியா ? தவறா?.

பீர் முஹ்ர் அலி ஷாஹ் அவர்கள் "தேவ்பந்த் உலமாகள் சுன்னத் வல் ஜமாதின் மிகப் பெரிய ஒரு பிரிவினர் " என்றும் , பீர் ஷேர் முஹம்மது ஸர்க்கபூரி (ரஹ்) அவர்கள் தேவ்பந்த் உலமாகளை "நூர் போன்ற பண்பு கொண்டவர்கள் " என்றும் கூறியிருக்கின்றார்கள்.
கஜாவா குலாம் பரீத் (ரஹ்) அவர்கள் தேவ்பந்த் உலமாகளை "அல்லாஹ்வின் இறை நேசர்கள்" என்பதாகவும் கூறியுள்ளார்கள்.

மேலும் அஃலா ஹஜ்ரத் அவர்கள் காபிர் என்றும் ,முஸ்லீம் என்றும் 2 விதமான பத்வாகளை கொடுத்துள்ளார்கள் .

 பதில் : 

தேவ்பந்த் உலமாகள் என்னுடைய தலைவர் சையது பீர் முஹ்ர் அலி ஷா அவர்கள் "தேவ்பந்த் உலமாகள் சுன்னத் வல் ஜமாதின் பெரும் பிரிவினர் என்ற பத்வா! .பீர் சர்க்கபூரி (ரஹ்) அவர்கள் "தேவ்பந்த் உலமாகள் நூர் போன்ற பண்பு கொண்டவர்கள் " என்ற பத்வா! .கவாஜா குலாம் பரீத் (ரஹ்) அவர்கள் "தேவ்பந்த் பெரியார்கள் அல்லாஹ்வின் நேசர்கள் " என்ற பத்வா! .

மௌலான ரஷீத் அஹமது கங்கோஹி ,மௌலானா முஹம்மது காஸிம் நானூத்தவி இவர்கள் இருவரும் பரிபூரணத்துவம் பெற்ற வலீ என்பதாக "மகாபிஸீல் மஜாலிஸ்" என்கிற கிதாபில் இருக்கக்கூடிய பத்வா!.

இந்த பத்வாகள் உண்மையிலேயே இந்த பெரியார்களின் கிதாபில் இருக்கக்கூடியதும் ,சரியாணவையும் ஆகும். மேலும் அஃலா ஹஜ்ரத் (ரஹ்) அவர்கள் தேவ்பந்த் உலமாகளை காபிர் என்று சொன்னது அறியாமையின் அடிப்படையிலாகும். எப்போது தேவ்பந்த் உலமாகள் கிதாபான "அல் முஹன்னத் அலா அல் முபன்னத் " அது அல்லாத பல வேறு கிதாபுகள் அவர்களின் பார்வைக்கு வந்ததோ ! அதன் பிறகு பரேலவி அவர்கள் தங்களுடைய பத்வாகளை வாபஸ் வாங்கிக் கொண்டார்கள். "தமீருல் ஈமான்" ," சுபஹான ஸுபுஹ்" அது அல்லாத பல கிதாபுகளில் இதை தெளிவாக சொல்லியுள்ளாகள்.

"அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் 1000 தடவை சொல்லுகிறேன் தேவ்பந்த் உலமாகள் காபிர்கள் அல்ல"

இதனுடை விளக்கம் என்னவென்றால் மௌலானா ரஷீத் அஹமது கங்கோஹி (ரஹ்) ,மௌலானா கலீல் அஹமது அம்பட்டேவி (ரஹ்), மௌலானா அஸ்ரப் அலி தானவி (ரஹ்) அவர்களை முஸ்லீம் என்பதாக நான் அறிந்திருக்கின்றேன். அதே போல் இஸ்மாயில் தெஹ்லவி (ரஹ்) அவர்கள் மீதும் குப்ருடைய பத்வா அல்ல!.

இது தான் அஃலா ஹஜ்ரத்துடைய இறுதி பத்வா ஆகவும் , இறுதி முத்திரையாகவும் இருந்தது. இதை யார் சொன்னார்களென்றால் என்னுடை தலைவரும் நான் சார்ந்திருப்பதான மௌலானா அஹமது ஸஹீது ஸாஹிப் காஷிமி அவர்கள் "அல் ஹக்குல் முபீன்" என்ற கிதாபில் இந்த பத்வாவை கூறியிருக்கின்றார்கள். அதே போல் நம்முடைய பரேலவி உலமாகள் தேவ்பந்த் உலமாகளை காபிர் என்றும் சொல்லவில்லை. எந்த கிதாபுகளிலும் அப்படி இல்லை. தேவ்பந்த் உலமாகள் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் தான்.

ஆதாரம் :

                    

15 Sept 2016

பரேலவிகளின் அன்வாரி ஸாதிஆ உண்மை சொரூபம்.

பரேலவிகளின் பெரியார் محمدعبدالسمیع என்பவர் "அன்வாரே ஸாதிஆ" என்ற நூலில் எழுதுகிறார்.

"ஷைத்தானின் அறிவானது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் அறிவை விட விரிவானது "

(ஆதாரம் :அன்வாரி ஸாதிஆ பக்கம் 259)

பரேலவிகளே ரோசம் வரவில்லையா ?

நீங்கள் ஆதரிக்கும் பெரியாரே இப்படி சொல்கிறார் அவருக்கு எதிராக கொடி பிடிக்க வில்லை??



ஆதாரம் :




   

11 Sept 2016

இப்னு தைய்மியா (ரஹ்) அவர்கள் பற்றி பரேலவிய முன்னோர்கள் & ஆதரிப்பாளர்களின் கருத்து.

ஷைகுல் இஸ்லாம் இப்னு 
தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் பரலேவிய உலமாக்கள் மற்றும் பரலேவியர்கள் அங்கீகரிக்கும் உலமாக்களின் பார்வையிலே!
  
பரலேவிகள், ஷைகுல் இஸ்லாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்களை வழிகேடன் என்பதாகவும், இறைநிராகரிப்பாளன் என்பதாகவும் வரம்பு கடந்து விமர்சிக்கின்றனர்.
ஆனால் பரலேவிகளின் ஆரம்ப கால பெரியோர்கள் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்களை ஷைக் என்றும், இமாம் என்றும், கல்விக்கடல் என்பதாகவும் அங்கீகரித்துள்ளனர்.
  
பரலேவிய அறிஞர் கூறுகிறார்: 

இமாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) மற்றும் அவரைச் சார்ந்தவர்களுடன் கருத்து வேறுபாடு இருந்த போதும் எனது தாதா அஃலா பீர் முஹ்ர் அலி ஷாஹ் (ரஹ்) அவர்கள் அன்னாருக்காக (இப்னு தைய்மிய்யா) அல்லாஹ் அவரை மன்னிப்பானாக! ' 'என துஆ செய்தார்கள். அன்னாரின் பெயருடன் ஷைகு என்பதை இணைத்துதான் எழுதுவார்கள்.(لطمة الغيب ص 284)

பரலேவிய அறிஞர் பீர் நஸீம் கூறுகிறார்: 

அக்காலத்தின் பெரும் மார்க்க மேதையைப் போன்றவர்தான் இப்னு தைய்மிய்யா ரஹ்
 (راہ رسم منزل با ص )

  பீர் மெஹர் அலி ஷாஹ் (ரஹ்) பரலேவி குறிப்பிடுகிறார்:

இப்னு தைய்மிய்யா (ரஹ்) மற்றும் அவர்களின் மாணவர்கள்
கல்விக்கடல், இஸ்லாமிய சேவகர் என்பதில் எந்த ஒரு விமர்சனமும் இல்லை.
مہہ( منیب باب )

  பரலேவிகளால்  போற்றப்படும் அறிஞர் உமர் பரலேவி அவர்கள், இமாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) எழுதியுள்ளார்கள்: இப்னு தைய்மிய்யா (ரஹ்) சுன்னாவின் தலைவர்

அப்துல் ஹகீம் ஷரஃப் காதிரி பரலேவி تذکرہ اکابر اہلسنت என்ற நூலில்  
உமர் பரலேவி அவர்களை நல்ல அறிஞர் என்பதாக அங்கீகரித்துள்ளார்கள் ۔

இப்னு ஆபிதீன் ஷாமி (ரஹ்) அவர்கள், இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்களை "ஷைகுல் இஸ்லாம்" என்பதாக புகழாரம் சூட்டியுள்ளார்கள் (رد المحتار )

இப்னு ஆபீதின் ஷாமி (ரஹ்) அவர்களைப் பற்றி பரலேவிய தலைவர் கூறுகிறார்கள்:  

அஹ்மத் ரிளாகான்
உறுதி மிக்க  ஆய்வாளர்களில் முத்திரையாக திகழ்ந்தார்கள். (فتاوی رضویہ)

  நல்ல அறிஞர் என்றும், தலைவர் என்றும் இப்னு ஆபிதீன் ஷாமி ரஹ் அவர்களை  அஹ்மத் ரிளாகான் பரலேவி குறிப்பிட்டுள்ளார் (فتاوی رضویہ)


அல்லாமா சூயூத்தி (ரஹ்) அவர்கள் பரலேவிகளால் போற்றப்படும் மிகப் பெரும் மார்க்க மேதை
இவர் (ஸுயூத்தி ரஹ்) அவர்கள், இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்களைப் பற்றி கூறுவதைப் பாருங்கள் :

ابن تيمية الشيخ الامام العلامة الحافظ الناقد الفقيه المجتهد المفسر البارع شيخ الاسلام

 இப்னு தைய்மிய்யா அவர்கள்
மூத்த அறிஞர் , இமாம் பெரும் மேதை, ஹாபிள் ஆய்வுத்திறன் உடையவர் பகீஹ், முஜ்தஹித் எனும் ஆய்வாளர் தேர்ச்சி மிக்க விரிவுரையாளர் இஸ்லாத்தின் பெரியோர்  (طبقات الحفاظ) 

இமாம் இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்களை புகழ்ந்த ஸுயூத்தி (ரஹ்) அவர்களைப் பற்றி ரிளாகான் பரலேவி கூறுகிறார்: 


ஹதீஸ் கலையில் கரைகண்ட ஹாபிள், முத்திரையானவர் இமாம், கண்ணியமானவர் மார்க்கத்தின் தீனின் சங்கையானவர் ஸுயூத்தி ரஹ் அவர்கள் (فتاوه رضويه) 


இமாம் இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்கள் மற்றும் இப்னு கையிம் ரஹ் அவர்கள் இருவரும் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் பெரியோர்களில் உள்ளவர்கள் இந்த ஜமாஅத்தின் நல்லோர்களில் உள்ளவர்கள் என முல்லா அலி காரி ரஹ் அவர்கள் புகழ்ந்துள்ளார்கள்.(جمع الوسائل فی شرح الشمائل )


ஹனீஃப் குரைஷி பரலேவி அவர்கள், முல்லா அலி காரி ரஹ் அவர்களை பிரபல்யமான முஹத்திஸ் என குறிப்பிட்டுள்ளார் 
(روائد مناظر گستاخ کون )


இமாம் ஸுன்னா இப்னு தைய்மிய்யா ரஹ் என அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி குறிப்பிட்டுள்ளார்கள்
(تعارف فقہ و تصوف ) 

கவாஜா குலாம் பரீத் அவர்கள், இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்களை அஹ்லே ஹதீஸினரின் இமாம் இமாம் ஹள்ரத் இமாம் இப்னு தைய்மிய்யா என புகழ்ந்துள்ளார்கள்

 (مقابیس المجالس) 

கவாஜா குலாம் ஃபரீத் பரலேவிய அறிஞர்களில் உள்ளவர் என்பதானது பரலேவிகளின் அங்கீகாரம் பெற்ற நூலான تذکرہ اکابر اہل سنت வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


 ஆக இதன் மூலம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் தனித்து விளங்கும் அறிஞர் பெரும் மார்க்க மேதை அது மட்டுமின்றி முல்லா அலி காரி ஹனஃபி ரஹ் அவர்களின் கண்ணோட்டத்தில் அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஅத்தின் நல்லோர்களில் உள்ளவர்.எனினும் இன்றைய அறியாமை நிறைந்த பரலேவிகள் உண்மை நிலையை அறியாமல் இமாம் இப்னு தைய்மிய்யா ரஹ் அவர்களை விர்சிப்பதானது உண்மைக்கு எதிரானதும்,அபாண்டமும் பொய்யுமாகும்.

முக்கிய குறிப்பு:இமாம் இப்னு தைய்மிய்யா (ரஹ்) அவர்கள் பெரும் மார்க்க அறிஞராக இருந்த போதிலும் சில சட்டங்களில் பெரும்பான்மை
அறிஞர்களுக்கு மாற்றமாக தீர்ப்பளித்துள்ளார்கள் என்பதையும் நினைவில் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறோம்.

ஆதாரங்கள் :














                                     





10 Sept 2016

அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் தப்லீக் ஜமாத் பத்வா.

வேலூர் மத்ரஸா அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பத்வா: 

 அஸ்ஸலாமு அலைகும் வரஹ்..!!

 தப்லீக் ஜமாஅத் எப்படிப்பட்டது இந்த ஜமாஅத்தில் பங்கு கொள்வது எப்படி தீனுடைய ஆலிம்கள் இது சம்பந்தமாக என்ன கூறுகிறார்கள் தயை கூர்ந்து விடை அளிப்பீராக!

பதில் :

நேர்மைக்கு தவ்பீக் அளிப்பவன் அவனே! தப்லீக் வேளையில் பங்கு பெறக்கூடியவர்களுக்கு வழிகாட்டும் நூலும்,கலிமா,தொழுகை, இல்ம்,திக்ர்,இக்ராம் முஸ்லிம் இவைகளை கற்பதற்கென நேரத்தை ஒதுக்குதல் இவைகளைப் பற்றி இவற்றை விவரிக்கும் நூலாகிய ச்சே பாத்தே தப்லீகின் ஆறுதிட்டங்கள் என்ற நூலை படித்துப் பார்த்த பொழுது குறிப்பாக நேரத்தை ஒதுக்கல் என்பதை படித்தறிந்த போது குழப்பமும் மறதியும் நிறைந்த இக்கால சூழ்நிலையில் குப்ரு ஷிர்க் மதம் துறத்தல் மலிந்த வேளையில் மேற்கூறப்பட்ட ஜமாஅத்தின் வேலைத்திட்டம் காலத்திற்கு மிகப்பொருத்தமானது இருக்கிறது.இந்த ஜமாஅத்தில் பிரயாணம் செய்யக் கூடியவர்கள் குடும்பம் உடையவர்களாக இருந்தால் பிரயாணத்திலிருந்து திரும்பி வரும் வரை குடும்பத்தினருக்குரிய செலவு கொடுத்து செல்வதும் மக்களிடம் கடினம் காட்டல் நிர்பந்தித்தல் கேவப்படுத்தும் முறையில் நடந்து கொள்ளுதல் இவைகள் ஏற்படாமல் பாதுகாப்பதும் பொதுவாக முஸ்லிம்களுடன் கண்ணியத்தோடு நடந்து கொள்வது குறிப்பாக ஆலிம்களோடு சங்கையோடு நடந்து கொள்வது நிபந்தனைகளாகும்.இப்படித்தான் தப்லீகின் பொறுப்பாளரான அறிஞர்கள் இவ்வேலையின் அடிப்படை உசூலில் கூறியுள்ளார்கள்.இதன்படி தப்லீக் வேலையில் ஈடுபட்டால் அது மறுக்கப்பட்டதாக ஆகாது.



இந்த தப்லீக் சுன்னத் வல் ஜமாஅத்தை சார்ந்த ஜமாஅத்தேயாகும்.இவர்களது நோக்கம் தமது ஊரில் இருந்து கொண்டு செம்மை பெறமுடியாத அமல் செய்ய இயலாதவர்கள் தமது அச்சூழ்நிலைகளை விட்டு சில நாட்களுக்கு அமீருக்கு கட்டுப்பட்டு பிரயாணம் செய்து தப்லீக் திட்ட கிதாபுகளை தங்களுக்கிடையே படித்து கேட்டு வந்தால் சீர்பட ஆரம்பிப்பார்கள்.

இன்னும் சிறிய சூரத்துக்கள் அத்தஹிய்யாத் ஸலவாத்து ருகூஃ ஸுஜுது தஸ்பீஹிகள் குனூத் முதலியவைகளை ஞாபகம் செய்து தொழுகையாளிகளாக ஆகி ஐந்து நேரத்தொழுகைகளை விடாமல் பேணித்தொழுபவர்களாகவும் ரமலான் நோன்பு நோற்பவர்களாகவும் பணவசதியுடையர்களாக இருந்தால் ஹஜ்ஜும் ஜகாத்தும் நிறைவேற்றுபவர்களாகவும் ஆகிவிடுவதுடன் இஸ்லாமிய சின்னமான தாடி வைத்தலையும் ஏற்றுச்செயல்படுபவர்களாக தாங்கள் முஸ்லிம்கள் என்று எடுத்துக்காண்பிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்.இதை நாம் கண்கூடாக தப்லீக் இஜ்திமாக்களிலும் ஆண்டு கூட்டங்களிலும் கண்டுள்ளோம். தப்லீக் உசூலின் பொறுப்பாளிகளான பெரியார்கள் அவரவர்களுடைய அந்தஸ்த்தை முன்வைத்துக் கூறுகிறார்கள்.அதாவது குறைந்த வசதியும் சக்தியும் உள்ளவர்கள் தமது ஜில்லாவில் உள்ள சுற்றுப்புற கிராமங்களிலும் நடுத்தர வசதியும் சக்தியுமுடையவர்கள் மாகாணத்தில் உள்ள சுற்றுப்புறங்களிலும் நிறைந்த வசதியுடையவர்கள் வெளிநாடுகளிலும் பிரயாணம் செய்யுள் வேண்டும்.குஃப்ரு ஷிர்க்கு நாத்திகம் கிருத்துவம் மிகைத்தால் அகத்தாலும் புறத்தாலும் உண்மையான முஸ்லிம்களாக இல்லாமல் வாழும் முஸ்லிம்களை செயல்வடிவில் முன்மாதிரியாக ஆக்கி நற்செயல்களில் பால் இழுத்துகொண்டு வருவதற்காக ஆக தற்காலத்தில் நிகழும் குழப்பமான சூழ்நிலையில் இந்த வேலையும் அமலை சீர்படுத்த செயல் நுட்பாகும்.வல்லாஹு யஹ்தீ இலல் பாக்கியாத் ஸாலிஹாத். தப்லீக் ஜமாஅத்தின் பொறுப்பாளரான மெளலானா முஹம்மது இல்யாஸ் சாஹிப் மெளலானா ஷைகுல் ஹதீஸ் ஜக்கரிய்யா சாஹிப் மெளலானா முஹம்மது இல்யாஸ் சாஹிபின் புதல்வரும் மெளலானா ஷைகுல் ஹதீஸ் முஹம்மது ஜக்கரிய்யா சாஹிபின் மருமகனுமான மெளலானா முஹம்மது யூசுப் சாஹிப் ஆகிய இவர்களனைவரும் அஹ்லே சுன்னத்து வல்ஜமாஅத் அமைப்பைச் சார்ந்தவர்கள்.ஒப்புக்கொள்ளப்பட்ட நான்கு மத்ஹபுகளில் ஹனபி மத்ஹபை பின்பற்றுபவர்கள்.மெளலானா ஜக்கரிய்யா சாஹிப் அவர்கள் முஅத்தா இமாம் மாலிக் ரஹ் வின் விரிவுரையாக அவ்ஜஸுல் மஸாலிக் என்ற நூலை எழுதியுள்ளார்கள்.அதில் ஹனபி ஷாபியீ மத்ஹபுகளின் தலீல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.மேலும் அந்நூல் ஹனபி மத்ஹபின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது.

மெளலானா முஹம்மது யூசுப் ஸாஹிப் அவர்கள் மஆனியுல் ஆதார் என்ற நூலுக்கு அமானியுல் அஹ்பார் என்ற விரிவுரை நூலை எழுதியுள்ளார்கள் இதுவும் மத்ஹபின் அடிப்படையிலேயே உள்ளது அஹ்லே சுன்னத்தை சாராத சிலர் இந்த ஜமாஅத்தில் சேர்ந்து குழப்பம் உண்டாக்கினால் அதன் காரணமாக அஹ்லே அஹ்லே சுன்னத்து சேர்ந்த அனைவரும் அதில் சேராதவர்களாக ஆகிவிடமாட்டார்கள்.அஹ்லே சுன்னத் வல்ஜமாஅத் என்போர் நான்கு மத்ஹபுகளான ஹனஃபி ஷாபியீ மாலிகி ஹம்பலியை சார்ந்தவராவார்.இந்த ஜமாஅத்தைச் சார்ந்த ஆலிம்கள் குழப்பங்களை நீக்கி சீர்திருத்த விரைந்து செல்வதும் அமலே ஸாலிஹை செம்மைப்படுத்த பொதுவாக முஸ்லிம்களின் கவனத்தை திருப்புவது அவசியமாகும்.அமலை செம்மைப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ள இந்த ஜமாஅத்திற்கு வழிகாட்டுவதும் நடத்திச் செல்வதும் ஆலிம்களுக்கு அவசியமாகும்.பிக்ஹ், ஹதீஸ் கிதாபுகளிலிருந்து இதுவே விளங்குகிறது.

நேர்மையை அல்லாஹ்வே மிக அறிந்தவன்.26-09-1971 ஒப்பம் அப்துல் வஹ்ஹாப் அபா அன்ஹு முஃப்தியே மதரஸா பதில் சரியானதே ஒப்பம் ஷைகுல் ஹதீஸ் ஷைகு ஹஸன் அஃபல்லாஹு அன்ஹு முத்திரை மத்ரஸதுல் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் வேலூர் இந்த பத்வா ஹிஜ்ரி 1392 ரபீஉல் அவ்வல் கிபி 1972 ல் நெல்லையிலிருந்து வெளிவரும் ஜமாஅத்துல் உலமா மாத இதழிலும் 1972 ஏப்ரல் ரஹ்மத் மாத இதழிலும் வெளிவந்துள்ளது.

இதே பத்வாவை நீடுர் மிஸ்பாஹீல் ஹுதா மதரஸாவிற்கும் சங்கரன் பந்தல் பைஜுல் உலூம் மத்ரஸாவிற்கும் அனுப்பப்பட்டது.அச்சமயம் மிஸ்பாஹுல் ஹுதாவின் நாஜிராக இருந்த மெளலானா எம் முஹம்மது ரஹ்மத்துல்லாஹ் ஹள்ரத் அவர்களும் பைஜுல் உலூம் மதரஸாவின் தலைமை ஆசிரியர் மெளலானா காஜா முயீனுத்தீன் ஹள்ரத் அவர்களும் சரிகண்டு ஒப்பம் வைத்துள்ளார்கள்.என்பது குறிப்பிடதக்கது.

(பார்க்க: ரஹ்மத் மாத இதழ் 1972,ஏப்ரல் பக்கம் 2 &4)(நன்றி மனாருல் ஹுதா)

9 Sept 2016

அஹமது ரிழா பரேலவி நபி ﷺ அவர்களுக்கு இமாமாக தொழவைத்த நிகள்வு நவூதுபில்லாஹ்..

ரிளாகான் பரலேவி "இமாமாகவும்" அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள்"முக்ததியாக" தொழத நிகழ்வு (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

பரலேவிகள் அண்ணல்நபி (ஸல்) அவர்களின் நேசம்தான் எங்கள் சுவாசம் என்பதாக கூறித்திரிவார்கள்.இதுவெறும் வாய்ச்சொல் மட்டும்தான் தவிர செயல் வடிவில் நிரூபிப்பவர்கள் அல்ல.
இதுமட்டுமின்றி அண்ணல் நபி (ஸல்) அவர்களை அவமதிப்பவர்கள் களங்கத்தைஏற்படுத்துபவர்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்வு சான்றாக உள்ளது. பரலேவிகளின்நிலைப்பாட்டை விளக்கி அந்நிகழ்வை கூறுவதானது பொருத்தமாக இருக்கும்.பரலேவிகளின் கொள்கையானது அண்ணலார் ஹாளிர் (எல்லா நேரமும் ஆஜராகி இருப்பவர்)நாளிர்  (அனைத்தையும் பார்ப்பவர்) நல்லோர்களின் ஜனாஸாவில் கலந்து கொள்வார்கள்.இதனை நன்றாக மனதில் பதிய வைத்து இனி ஆய்விற்குள் நுழைவோம்.


ரிளாகான் பரலேவி அவரது மல்பூஜாதில் எழுதியுள்ள நிகழ்வு:

  மெளலவி பரகாத் அஹ்மத் ஸாஹிப் மரணமான போது மெளலவி ஸய்யித் அமீர் அஹ்மத் (ரஹ்)அவர்களின் கனவிலே நபி (ஸல்) அவர்களை சந்தித்தார்கள்.நபி (ஸல்) அவர்கள்குதிரையில் சென்று கொண்டிருந்தார்கள்.எங்கு செல்கிறீர்கள்? 'எனஸய்யித் அஹ்மத் (ரஹ்) கேட்ட பொழுது அதற்கு அண்ணலார் அவர்கள் பரகாத் அஹ்மத்அவர்களின் ஜனாஸாவில் கலந்து கொள்ள செல்கிறேன் என்றார்கள் இதன் பிறகு ரிளாகான்பரலேவி கூறுகிறார் அல்ஹம்துலில்லாஹ்இந்த ஜனாஸாவிற்கு நான்தான் தொழவைத்தேன். (ஆதாரம் மல்பூஜாத் இரண்டாவது பாகம்)


ரிளாகான் பரலேவி எழுதிய நிகழ்வானது கனவுதான் எனினும் தொழவைத்த நிகழ்வுவிழிப்பு நிலையிலாகும்.இதில் பெருமையுடன் அல்ஹம்துலில்லாஹ் என கூறுகிறார்


பரலேவிகளின் மறுப்பும் நமது பதிலும்:

ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு பின்னால் நின்று நபி (ஸல்) அவர்கள்தொழுதுள்ளார்கள்.அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரளி) அவர்களுக்கு பின்னால்நின்று தொழுதுள்ளார்கள்.அபூபகர் (ரளி) அவர்களுக்கு பின்னால் நின்றுதொழுதுள்ளார்கள்  என்பதை முன்வைத்து ரிளாகானுக்கு பின்னால் நின்றும்தொழுதுள்ளார்கள் என பரலேவிகள் வாதிடுகின்றனர்.


நமது பதில் :

வானவர்களின் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மற்றும் ஸஹாபாக்களின் நிகழ்வைரிளாகானின் பரலேவி நிகழ்வோடு ஒப்பிடுவது அவமரியாதை இல்லையா? ஜிப்ரயீல் (அலை)அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அனுப்பப்பட்ட வானவர் அல்லாஹ்வின்உத்தரவின் பேரில் தொழுகை முறையை கற்றுக்கொடுத்த செய்தியோடு ரிளாகான்பரலேவியின் நிகழ்வோடு முடிச்சுப் போடுவது அறிவீனம் இல்லையா? அபூபகர் (ரளி) அவர்களுக்கு பின்னால் அண்ணலார் தொழுததாக வந்துள்ள நிகழ்வானது பெருமானாரின்உடல்நிலை சரியில்லாத நிர்பந்த சூழ்நிலையில் நடந்த நிகழ்வாகும்.இதனுடன்ரிளாகான் பரலேவியின் நிகழ்வை முடிச்சுப் போடுவது முறையா?


அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரளி) அவர்கள் அண்ணலாருக்கு தொழ வைத்தநிகழ்வானது அண்ணலார் தொழுகையின் இடையில் வந்து இணைந்து கொண்ட  நிகழ்வாகும்.


இந்த சந்தர்ப்பத்தில்ரிளாகான் பரலேவி  நிகழ்வுடன் புகாரியில் வரும் நிகழ்வை ஒப்பிட்டுப் பார்த்தால்ரிளாகான் பரலேவியின் பெருமை நிறைந்த தீயகுணத்தையும் அபூபகர் (ரளி) அவர்களின்பணிவு நிறைந்த குணத்தையும் புரிந்து கொள்ளலாம்.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூபக்ரே! நான் உங்களுக்கு சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்கு தொழுகை நடத்தவில்லை? என்று கேட்டார்கள்.அதற்குஅபூபக்ர் (ரளி),   நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுகை நடத்துவதற்குஅபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள்.(நீண்ட ஹதீஸின்சுருக்கம்) 


அபூபக்ர் (ரளி) அவர்களின் பணிவான இந்த வார்த்தையை எண்ணிப்பார்க்கும் பொழுது உள்ளம் நெகிழ்கிறது.அதே சமயத்தில் பெருமானாருக்கு நான் தான்தொழ வைத்தேன் என சொல்லும் ரிளாகான் பரலேவியின் வார்த்தையை எண்ணிப் பார்க்கும்பொழுது உள்ளம் கொதிக்கிறது.


பரலேவிகளின் வாதமும் நமது மறுப்பும்: 

அல்ஹம்துலில்லாஹ் என ரிளாகான் பரலேவிகூறியதானது பெருமையினால் அல்ல  மாறாக அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களுக்குஇமாமத் செய்கிற பாக்கியமானது அல்லாஹ் அருளிய அருட்கொடை என்பதை நினைத்துதான்கூறினார்கள்.


நமது மறுப்பு: 

அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு தொழவைப்பது அல்லாஹ்வின்அருட்கொடையெனில் அதற்கு நன்றி செலுத்தும் முகமாக ஜிப்ரயீல் அலைஅவர்களோ,அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளி அவர்களோ,அபூபக்ர் ரளி அவர்களோஅல்ஹம்துலில்லாஹ் என்று ஏன் சொல்லவில்லை? அவர்கள் இதனை  அருட்கொடை என்பதைஅறியவில்லையா?

 (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அபூபக்ரே! நான் உங்களுக்கு சைகை செய்தபோது நீங்கள் ஏன் மக்களுக்கு தொழுகை நடத்தவில்லை? என்று கேட்டார்கள்.அதற்குஅபூபக்ர் (ரளி),   நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் தொழுகை நடத்துவதற்குஅபூகுஹாஃபாவின் மகனுக்குத் தகுதியில்லை என்று பதிலளித்தார்கள்.  


ஆகஅல்லாஹ்வின் அருட்கொடையெனில் பிறகு   இவ்விதமாக அபூபக்ர் ரளி அவர்கள்  ஏன்இவ்வாறு கூறவேண்டும்?  நபி ஸல் அவர்களுக்கு தொழவைக்கலாம் என்றால் நபிஸல்அவர்களின் மரணித்த போது எந்த நபித்தோழரும் ஏன் தொழவைக்கவில்லை? என்பதற்கு

பரலேவிகளே பதில் தாருங்கள்! 

ஒரு வாதத்திற்கு அல்ஹம்துலில்லாஹ் என்று ரிளாகான்பரலேவி கூறியது, அல்லாஹ்வின் அருட்கொடை என்பதை எண்ணித்தான் எனஏற்றுக்கொண்டாலும் பரலேவிகள் மோசடியும் புரட்டுதலும் வெளிப்படுகிறது. ஏனெனில்மல்பூஜாதின் இரண்டாவது பாகத்தின் புதிய பதிப்பில் அல்ஹம்துலில்லாஹ் என்கிறவாசகத்தை அமைதியாக எடுத்துவிட்டனர்.ஆக இதன் மூலம் பரலேவிகள்,  அண்ணலாருக்குஎதிரானவர்கள் என்பதும் மார்க்க விவகாரங்களில் மோசடிக்கும்,புரட்டுதலுக்கும்சொந்தக்காரர்கள் என்பதும் தெளிந்த நீரோடையைப் போல் விளங்கமுடிகிறது.



ஆதாரம்:











4 Sept 2016

பரேலவிகளின் குற்றச்சாட்டுக்கு தக்க பதில் : 19 (தேவ்பந்த் ஆலிம்கள் வஹாபிகளா? 2)

பரேலவிகளின் வாதம் :

தப்லீக் ஜமாதின் நிறுவனர் மௌலானான இல்யாஸ் (ரஹ்) அவர்களின் குருமார்கள் வஹாபிசத்தையும் ,அதன் தலைவர்களையும் தங்களின் புத்தகத்தில் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.ஆகவே தப்லீக் ஜமாதும் வஹாபிகள் தான் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் மௌலான இல்யாஸ் (ரஹ்) அவரின் குருவான ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்கள் தனது فتاوى رشيدية ல் வஹ்ஹாபிஸத்தையும் அதன் தலைவரான "முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாபையும்" ஆதரித்து எழுதியுல்லார்கள் .

நமது பதில்:

ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்கள் "அப்துல் வஹ்ஹாப்" அவர்களை பற்றி கேள்விப்பட்டதை வைத்து தான் பத்வா கொடுத்தார்கள்.

அந்த பத்வாவில் سناہے என்ற வார்த்தை உள்ளது. அவரை நன்கு ஆராயாமலும் ,அவர் ஹம்பலி மத்ஹப் என்று பரவலாக பேசப்பட்டதாலும், பித்அதை வண்மையாக சாடுபவராக இருந்ததாலும் இவ்வாறாக فتاوي கொடுத்துள்ளார்கள்.

ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்களின் மறைவிற்க்கு பிறகு முஹம்மது இப்னு வஹ்ஹாப் நஜ்தியை பற்றி ஆதாரமுள்ள தகவல்கள் தேவ்பந்த் உலமாகளுக்கு தெறிய வந்த பிறகு அவரையும் ,அவரை சார்ந்தவர்களையும் வழிகேடர்கள் என பத்வா அளித்தார்கள்.

மேலும் மௌலானா கலீல் அஹமது அம்படேவி (ரஹ்) அவர்கள் المهند الي المفند என்ற தேவ்பந்த் உலமாகளின் 'அகீதா (عقيده) கிதாபில் இதை தெளிவாக சொல்லியுள்ளார்கள். மேலும் அவர்களை 'காரிஜியாக்களை' போன்று நாங்கள் கருதுகின்றோம் என்றும் சொல்லுயுள்ளார்கள்.

பரேலவிகளின் வாதம்:

 ரஷீத் அஹமது காங்கேஹி (ரஹ்) அவர்கள் அறிவித்த فتاوي வை ஏன் இன்னமும் நீக்க வில்லை? அப்படியென்றால் இன்னும் நீங்கள் அப்துல் வஹாப் நஜ்தியை ஆதரிக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

நமது பதில் :

ஒரு கிதாபை எழுதியவர் ஒரு விசயத்தில் தவறான கருத்துடையவராக இருப்பதால் அந்த கிதாபை அகற்ற வேண்டும் என்பது பல பாதகங்களை ஏற்படுத்தும்.

அந்த வாசகங்களை நீக்க வேண்டும் என்ற விஷயம் அந்த நூலை தொகுத்தவருடைய உரிமையாகும்.

உதாரணமாக ஈசால் சவாபுடைய விசயத்தை امام شافعي (ரஹ்) அவர்கள் சேராது என்று தீர்க்கமாக கூறியுள்ளார்கள். மற்ற மூன்று இமாம்களும் சேரும் என்று கூறுகிறார்கள். شافعي மத்ஹபை சேர்ந்தவர்கள் امام شافعي (ரஹ்) அவர்களின் கருத்தின் படி அமல் செய்யாமல் மற்ற மூன்று இமாம்களின் கருத்தின் அடிப்படையில் தான் அமல் செய்கிறார்களே தவிர امام شافعي (ரஹ்) அவர்களின் கருத்தை கிதாபிலிருந்து நீங்க யாரும் முற்படவில்லை!!..





அப்துர் காதிர் ஜெய்லானி (ரஹ்) அவர்கள் غنية الطالبين ல் 72 வழிகெட்ட கூட்டத்தாரை பற்றி கூறும் போது  ஹனபி மத்ஹபின் தலைவர் "இமாம் அபூ ஹனீபா" (ரஹ்) அவர்களை சார்ந்த சிலரை வழிகெட்டகூட்டத்தில் சேர்த்துள்ளார். அதை நீக்க வில்லை!!..

حديث 
களில் مولوغ ஆன ஹதீஸ்கள் என சுட்டிக்காட்டப்பட்டும் உள்ளன அதையும் நீக்க வில்லை!!..

இதையெல்லாம் அதிலிருந்து எடுத்துவிடும் படி சொல்லப்படவில்லை. ஆனால் இந்த பத்வாவை நீக்க சொல்லது தான் பரேலவிகளின் காழ்புணச்சியை வெளிப்படுத்துகிறது.

பரேலவிகளின் வாதம்:

இன்னும் தேவ்பந்திகள் தங்கள் புத்தகங்களில் இப்னு தைமியாவை "ஷைகுல் இஸ்லாம்" என்றும் புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.

நமது பதில் :

 الحافظ ابن حجر العسقلاني
(ரஹ்)
அவர்களும் கூட ابن تيمية அவர்களை شيخ الاسلام என்றே புகழ்ந்துள்ளார்களே!!

مسألة الزيارة والطلاق
என்ற வாசகத்தை படித்து விட்டு علامة ابن حجز (ரஹ்) அவர்கள் ابن تيمية வை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.

பரேலவிகளே உங்களை பொருத்த மட்டில் இப்படி சொன்ன இப்னு ஹஜர் அல் அஸ்கலனி (ரஹ்) அவர்கள் வழிகேடரா??

இன்னும் ...

இமாம் அல்அலுஸீ (ரஹ்) அவர்கள் தனது روح المعاني  ல் இப்னு தய்மியாவை புகந்து எழுதியுள்ளார்கள்.








இமாம் ஸாமி (ரஹ்) அவர்கள் தனது "பதாவா ஸாமி" ல் இப்னு தய்மியாவை புகழ்ந்து எழுதியுள்ளார்கள்.



எங்கே பரேலவிகள் இமாம் அல்அலுஸீ (ரஹ்) ,இமாம் ஸாமி (ரஹ்), அவர்களுக்கு எதிராக கொடிப் புடிக்க தயாரா??

இதெல்லாம் பரேலவிகளின் காழ்புணர்ச்சியே தவிர வேறு இல்லை!

அல்லாஹூ அஃலம்.

இதனின் முதலாம் பகுதியை காண இங்கு கிளிக் :

தேவ்பந்த் ஆலிம்கள் வஹாபிகளா? 1